ADVERTISEMENT

"வேறு வழியில்லை" - மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் சக ஓப்பனரை அறிவித்த ரோகித் சர்மா! 

06:16 PM Feb 05, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாட இருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட நவதீப் சைனி ஆகியோருக்கு கரோனா உறுதியானது.

இதனைத் தொடர்ந்து மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட மயங்க் அகர்வால், கரோனா விதிகளின்படி அணியில் சேருவதற்கு முன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அதேபோல் கே.எல் ராகுல் முதல் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. சகோதரி திருமணம் காரணமாக அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இதன்காரணமாக ரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்தநிலையில், வேறு வழியே இல்லாததால் தன்னுடன் இஷான் கிஷான்தான் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT