13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே தொடர் தோல்விகளால் கடும் பின்னடைவைச் சந்தித்து வந்த சென்னை அணி, மும்பை அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. 13 வருட ஐ.பி.எல் வரலாற்றில், சென்னை அணி பங்கெடுத்த தொடர்களில் அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறாமல் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். இது சென்னை அணி ரசிகர்களைப் பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சென்னை அணி ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு பதிவினைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "2020 CSK-க்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப strongஆ வருவாங்க! அணியில் சிலபல மாற்றங்கள் தேவைப்படும். ஏன்னா, மாற்றம் தான மாறாத ஒன்னு!" எனத் தமிழில் பதிவிட்டுள்ளார்.