ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி!

08:31 AM Oct 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

ADVERTISEMENT

துபாயில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 90, படிக்கல் 33, ஷிவம் துபே 22 ரன்கள் சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகின்றன. துபாயில் இன்று (11/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. அதேபோல், அபுதாபியில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT