ADVERTISEMENT

விலைபோகாத புலவர்; சாவ்லாவை தூக்கிய சாம்பியன்ஸ்!

04:55 PM Feb 18, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஏலம் எடுக்கப்படவில்லை. கேதார் ஜாதாவையும் எந்த அணியும் முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இந்த ஏலத்தில், மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், மேக்ஸ்வேல் ரூ.14.25 கோடிக்கும் ஏலம் போன நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, ஆடம் மில்னேவை ரூ.3.2 கோடிக்கும், நேதன் குல்டர் நைலை ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது.

உமேஷ் யாதவை டெல்லி அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இஷ் சோதியை யாரும் ஏலம் கேட்கவில்லை. தமிழ்ப் புலவர் என்று சென்னை ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. பியூஷ் சாவ்லாவை நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ரூ.2.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT