ADVERTISEMENT

பாரா ஒலிம்பிக்சில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை!

04:41 PM Aug 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை இந்தியாவின் பவினாபென் படேல், பெண்களுக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி, பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தநிலையில் தற்போது பவினாபென் படேல், செர்பியாவின் போரிஸ்லாவா ராங்கோவிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT