ADVERTISEMENT

ஸ்காட்லாந்து கேப்டன் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி வீரர்கள்!

10:11 AM Nov 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நேற்று (05.11.2021) நல்ல ரன் ரேட்டுடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி, ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதற்கிடையே, போட்டியின்போது ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கைல் கோட்சர், இந்திய அணி வீரர்கள் எங்களது ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். "அவர்கள் விளையாட்டின் சிறந்த தூதர்கள். கோலியாக இருந்தாலும், வில்லியம்சனாக இருந்தாலும், ரஷீத் கானாக இருந்தாலும், அவர்களுடன் எங்கள் வீரர்கள் பேச வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஒரே மற்றும் சிறந்த வழி அதுதான்" எனவும் கைல் கோட்சர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஷ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஸ்காட்லாந்து அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அந்த அணி வீரர்களுடன் உரையாடினர். இதுதொடர்பான படங்களை வெளியிட்டுள்ள ஸ்காட்லாந்து அணி, தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக விராட் கோலி மற்றும் சக இந்திய வீரர்களுக்குப் பெரும் மரியாதையை செலுத்துவதாக கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT