ADVERTISEMENT

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5- வது டெஸ்ட் கிரிக்கெட் ரத்து!

02:34 PM Sep 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கரோனா காரணமாக, இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், பி.சி.சி.ஐ. உடன் ஆலோசித்து ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று (10/09/2021) மதியம் 03.30 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தில் ரவி சாஸ்திரி உள்ளிட்ட சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இந்திய வீரர்கள் விளையாட தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT