ADVERTISEMENT

"நாளைய போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவார்"! - விராட் கோலி பேட்டி!

04:52 PM Feb 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (05/02/2021) தொடங்குகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று (04/02/2021) சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, "இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை ரிஷப் பந்த் களமிறங்குவார். நானும் ரஹானேவும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம்; அவர் பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார். அணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். வெற்றிபெற வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்புடன் உள்ளோம். நாட்டில் எந்தப் பிரச்சனை என்றாலும் அது குறித்த போட்டியின் இடையே வீரர்கள் விவாதிப்போம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT