இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியதால், இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏறத்தாழ கோலி, அஸ்வினைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடம் போனது, இந்தியாவின் முன்னாள் வீரர்களையே கோபம் கொள்ளச் செய்தது. பலரும் தங்கள் விமர்சனங்களைக் காட்டமாக முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, முக்கியப் பொறுப்புள்ள ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்டியா சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், “ஹர்தீக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டரைப் போல இன்னமும் செயல்படவில்லை. அவர் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. முழுமையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டுமானால், அவர் தனது திறமையை நூறு சதவீதம் காட்டவேண்டும்” என விமர்சித்திருந்தார்.