Skip to main content

தொடரை வெல்ல இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
Dhoni

 

 

 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரைப் போலவே, ஒருநாள் தொடரின் முடிவும் கடைசி போட்டியை நம்பியே இருக்கிறது. முதல் போட்டியில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் பதிலடி கொஞ்சம் பலமாகவே இந்திய அணியின் மீது விழுந்திருக்கிறது. 
 

நாளை நடக்கவிருக்கும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடவுள்ளன. இந்திய அணியின் பவர்ஃபுல்லான பேட்டிங், பவுலிங் காம்போவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தினால், நாளைய போட்டி சிறப்பான முடிவைத் தரும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதில் முக்கியமான இரண்டு மாற்றங்கள் இதோ...
 

 

 

கே.எல்.ராகுல் இடத்தில் தினேஷ் கார்த்திக்
 

DK

 

 

 

இந்தியாவின் பகுதிநேர பவுலர் இடத்தில் சுரேஷ் ரெய்னாவை இறக்கியுள்ளதால், நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் பென்ச்சில் இருக்கிறார். அதேசமயம், கே.எல்.ராகுலின் இடம் என்பது இரண்டு போட்டிகளில் சிறப்பாக பயன்படுத்தப்படவில்லை. டி20 போட்டிகளில் 3-ஆம் இடத்தில் களமிறங்கும் கே.எல்.ராகுலுக்கு, ஒருநாள் போட்டிகளில் 4-ஆம் இடம் என்பது கொஞ்சம் சிரமமான ஒன்றாக இருக்கலாம். எனவே, மிடில் ஆர்டரை வலுவாக்க கே.எல்.ராகுலின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை இறக்கலாம். அதிரடி ஷாட்களும், தேவையான நேரத்தில் சிங்கிள் ரொட்டேஷன்களும் கொடுக்கக்கூடிய அவர், அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார்.
 

 

 

புவனேஷ்வர் அணிக்கு திரும்பவேண்டும்
 

bhuvi

 

 

 

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி டி20 மற்றும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமாரை களமிறக்கவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் அசத்தலாக பந்துவீசிய சித்தார்த் கவுல், புவியின் இடத்தை சரியாக நிரப்பவில்லை. எனவே, புவனேஷ்வர் குமார் முழு உடல்த்தகுதியுடன் அணிக்குத் திரும்பவேண்டும். பவர்ப்ளே ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் பந்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, பந்துவீசும் அவரது அனுபத்தைக் கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி ரொம்பவே மிஸ் செய்திருக்கிறது. 
 

இந்த இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தால் நிச்சயம் இந்திய அணி வெல்லலாம். அதேசமயம், தொடக்க ஆட்டக்காரர்கள் களத்தில் தாக்குப்பிடிப்பதும் அணியின் பலத்தை அதிகரிக்கும்.  
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.