தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கான அபராத விபரங்களை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்புக்கு இருவரும் தலா ரூ.10 லட்சமும், பணியின்போது உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேசின் குடும்பத்தாருக்கு தலா 1 லட்சமும் இருவரும் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இருவருக்கும் மொத்தம் ரூ.20 லட்சம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை நான்கு நாட்களுக்குள் இவ்விருவரும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Show comments