ADVERTISEMENT

அடி கொஞ்சம் ஓவரோ...தந்தானி நானே தானி தந்தானோ- ஹர்பஜன் ஆர்சிபிக்கு ட்வீட்

08:24 AM Mar 24, 2019 | santhoshkumar

12வது ஐபிஎல் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சிஎஸ்கே, ஆர்சிபியுடன் மோதியது. முதலில் டாஸில் வெற்றிபெற்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்துவந்ததால் ஆர்சிபி அணி தட்டுதடுமாறி 17.1 ஓவர்களுக்கு 70 ரன்களே அடித்திருந்தனர். இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது சிஎஸ்கே. நிதானமாக விளையாடி சிஎஸ்கே அணி எழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த ஹர்பஜன் சிங், இந்த போட்டி முடிவடைந்தவுடன் வழக்கம்போல தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

“ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா. பஜ்ஜி டா போய் பழைய ஐபிஎல் ரெகார்ட் எடுத்து பாரு. பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் சென்னை என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ” என்று ட்வீட் செய்திருந்தார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் நான்கு ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT