ADVERTISEMENT

தோனியிடம் கேட்டபோது முடியாது என்று சொல்லிவிட்டார்: ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் பூரிப்பு...

04:42 PM Mar 07, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க பொதுக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் மைதானத்தின் நார்த் பிளாக் ஸ்டாண்ட், விஐபி பாக்சஸ் ஆகியவை அடங்கிய பகுதிக்கு தோனி பெவிலியன் என்று பெயரிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அதன் பெயர் மாற்றப்பட்டு அந்த திறப்பு விழாவிற்கு தோனியை அழைத்தபோது அதனை திறந்து வைக்க தோனி மறுத்துவிட்டதாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஸ்டேடியத்தின் ஒரு பகுதியான நார்த் பிளாக் ஸ்டாண்ட், விஐபி பாக்சஸ் ஆகியவை அடங்கிய பகுதிக்கு தோனி பெவிலியன் என்று பெயரிட முடிவு எடுத்தோம். பெயர் மாற்றப்பட்ட பிறகு அவரையே அந்த பெவிலியனை துவங்கி வைக்குமாறு கேட்டோம், அவர் உடனே, ‘என் சொந்த வீடு இது, இதனை நானே துவங்கி வைக்க என்ன இருக்கிறது?’ என்றார், அவரிடம் இன்னமும் தன்னடக்கமும், எளிமையும் இயல்பாகவே இருக்கிறது" என தோனியை பற்றி அதிசயித்து பேசியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT