Skip to main content

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தோனி & கோ-வின் பலவீனமான மிடில் ஆர்டர் பேட்டிங்...

Published on 03/10/2018 | Edited on 04/10/2018

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணியுடனான ஆட்டத்தில் கடைசி ஓவரில் போராடி வென்றது இந்திய அணி. இறுதிப் போட்டியில் விளையாடிய வங்கதேச அணியில் தமீம் இக்பால், ஷகிப் உல் ஹசன் மற்றும் ஷபிர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லை. இந்த நிலையில் 222 ரன்களை எடுக்கக்கூட வங்கதேசத்துடன் போராடி வென்றது இந்தியா. இறுதிப் போட்டிக்குப் பிறகு ரசிகர்களிடமும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன. 
 

dd

 

 

மிடில் ஆர்டரில் தோனியைத்தவிர மற்ற வீரர்களுக்கு நல்ல அனுபவம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். 4-7 இடங்களில் விளையாடும் வீரர்கள் பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றனர். அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, அம்பதீ ராய்டு, கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்தர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் அந்த இடங்களில் விளையாடி வருகின்றனர். 

 

dd


 

2015-உலக கோப்பைக்குப் பின்னர் இந்திய அணி 62 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். இந்திய அணியின் மொத்த ரன்களில் 50 சதவிகதத்துக்கும் மேற்பட்ட ரன்கள் டாப் 3 பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்கள். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சராசரி  60-க்கு மேல் உள்ளது. 2015-உலக கோப்பைக்குப் பின்னர் மிடில் ஆர்டர்  பேட்ஸ்மேன்களின்(4-7) சராசரி 35 தான். 

 

dd

 

இந்த வருட ஆசிய கோப்பை தொடரில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 5 போட்டிகளில் 2 சதம் உள்பட 342 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்ததாக  கேப்டன் ரோஹித் ஷர்மா 5 போட்டிகளில் 2 அரை சதம், ஒரு சதம் உள்பட 317 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மற்றபடி மிடில் ஆர்டரில் சொல்லும்படி யாரும் சரியாக விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு புதியது அல்ல. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா தொடர்களிலும் இதே நிலைதான். 
 

dd

 

 

தற்போது உள்ள நிலையில் உலக கோப்பை போட்டிக்கு 4 மற்றும் 6-வது இடங்களை யார் நிரப்புவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தினேஷ் கார்த்திக், அம்பதீ ராய்டு, மனீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் 4-வது இடத்தை நிரப்பலாம். ஆனால் மனீஷ் பாண்டேவும், ஸ்ரேயஸ் ஐயரும் கடந்த சில தொடர்களில், ஆடும் 11 பேரில் தேர்வாகவில்லை. 6-வது இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது ஜடேஜா விளையாட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிய அளவு பங்களிப்பை வழங்குவதில்லை. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், அவருடைய பேட்டிங் சில காலங்களாக பெரிய அளவில் சிறப்பாக இல்லை என்பதே உண்மை.


       
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பங்களிப்பால் வெற்றி பெற்றதாக சமீப காலங்களில் எந்தவொரு போட்டியும் இல்லை. அதேசமயத்தில் மிடில் ஆர்டர் சொதப்பலால், வெற்றி பெறக்கூடிய போட்டிகளில்கூட தோல்வியடைந்துள்ளது. இதைக்கூடிய விரைவில் சரிசெய்ய வேண்டிய  நிலையில் இந்திய அணி உள்ளது.

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.