ADVERTISEMENT

முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல் ஆடப்போகும் இந்தியா!

07:13 PM Feb 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில், கடந்த 24 ஆம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் முடிந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, மார்ச் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இந்தப் போட்டியிலிருந்து பும்ரா விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்குப் பதிலாக சிராஜ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் வென்றாலோ அல்லது சமன் செய்தாலோ மட்டுமே, உலகக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும். முக்கியமான ஆட்டத்தில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT