சச்சின் குறித்து அக்தர் இன்று சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவலால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எவ்வளவு பரபரப்பாக இருக்குமோ, அதற்கு சிறிதும் குறைவில்லாதது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளக் சோயப் அக்தர், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது. இருவரும் களத்தில் இருக்கும்போது இருநாட்டு ரசிகர்களும் உற்சாகமாகவும், பதட்டத்துடனும் இருப்பார்கள்.
ADVERTISEMENT
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், நான் சச்சினை 12, 13 முறை அவுட் செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உண்மையில் 8 முறை மட்டுமே சச்சினை அவுட் செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 5 முறையும், டெஸ்ட் போட்டியில் 3 முறை மட்டுமே அக்தர் சச்சினை அவுட் செய்துள்ள நிலையில், அவரின் இந்த தவறான தகவலை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments