ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. 3 ம் நாள் முடிவில் இந்தியா அணி 151 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. காலையில் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராகுல் 44 ரன்களிலும், கோலி 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிவரும் புஜாரா 127 பந்துகளில் 40 ரங்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Show comments