இது ஒருபுறம் என்றால் இதனால் மது குடிப்பவர்களுக்கு மனதளவில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, " மது குடிப்பவர்களுக்கு தனிமை, மன பதட்டம் முதலியவை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மது குடித்து வந்தவர்கள் திடீரென அதனை நிறுத்துவதால் அவர்களுக்கு இந்தப் பாதிப்புக்கள் இயல்பாகவே வந்துவிடுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் கோபம் வர வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் யாரும் அதிகம் பேச வேண்டாம். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு முதலியவற்றைத் தொடர்ந்து கொடுக்கலாம். இது எதற்கும் வழி இல்லை என்றால் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சக்கரை கலந்து தொடர்ந்து குடிக்கலாம். இது அவர்கள் உடல்நலத்திற்கு நன்மையாக இருக்கும்" என்றார்