ADVERTISEMENT

குழந்தை பாக்கியத்திற்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா?  - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன்  விளக்கம்

03:14 PM Mar 25, 2024 | dassA

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

ADVERTISEMENT

ஒரு திருமணமான ஆண், பெண் இருவரின் ஜாதகத்திலும் விதியாக குழந்தை பாக்கியத்திற்கான அமைப்பு நன்றாக இருந்தால்தான் வாழ்வில் நல்ல காரியங்கள் விரைவில் நடக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் குழந்தை பிறக்கக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். இன்றைய சமுதாயத்தில் ஜாதக ரீதியாக பார்க்கிற பொழுது அந்தக் காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது என்பது மிகவும் குறைவாக இருந்தது. ஒரு ஆணுக்கு 23 வயதுக்குள்ளும், பெண்ணுக்கு 20 வயதிற்குள் திருமணம் செய்து விடுவர். இன்று போகப் போக 25 வயதிலிருந்து ஒரு ஆணுக்கு திருமண வயது என்பது 30 என்றும், பெண்களுக்கு 25 - 27 என்று வந்துவிட்டது. அது மட்டும் இல்லாமல் தற்போது இருக்கக்கூடிய உணவுப் பழக்கங்கள் சுற்றுச்சூழல் ஆகியவை ஆரோக்கிய வேறுபாடுகளை உண்டாக்கி குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு சில இடையூறுகளை உண்டாக்கி விடுகிறது.

ADVERTISEMENT

ஆண் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, குரு பகவான், மூன்றாம் வீடு, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகியவை குழந்தை பாக்கியத்தை குறிக்கின்றன. பெண் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, குரு பகவான், செவ்வாய், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகியவை குழந்தை பாக்கியத்தை குறிக்கின்றன. ஒரு ஆண் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு குழந்தை பாக்கியத்தை குறிக்கிறது. ஐந்தாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும். அதாவது ஐந்தாம் வீட்டில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

அடுத்து குழந்தை பாக்கியத்திற்கான நவக்கிரகங்களில் புத்திரக்காரன் என்று வழங்கக்கூடிய குரு பகவான் ஆவான். எனவே குரு பகவான் பலமாக இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்கும். அதைத் தாண்டி மூன்றாம் வீட்டில் பார்க்க வேண்டும். மூன்றாம் வீடு ஆண்மை சக்தியையும் வீரியத்தையும் குறிக்கிறது. மூன்றாம் வீடு பலமாக இருந்தால், ஆண்மை குறைபாடுகள் இல்லாமல் குழந்தை பாக்கியம் உண்டாகும். அதுவே பலவீனமாக இருந்தால் அவருக்கு ஆண்மை குறைபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் இருக்கும்.

அதுவே மூன்றாம் அதிபதியின் ஆட்சி உச்சத்தில் இருந்து குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் குழந்தை பாக்கியத்திற்கு வாய்ப்புகள் பலமாக இருக்கும். பொதுவாக குரு நல்ல ஸ்தானத்தை ரக சேர்க்கையோடு இருந்தால் ஒரு வளமான வாக்கியத்தை உண்டாக்கும். ஆனால் குரு வக்ர நிலையில் இருக்கும்பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறைபாடுகள் உண்டாகும். குரு இருக்கக்கூடிய இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் சூரியன் வக்ரம் வரும்போது குருவும் வக்கிரம் பெறுவார். அதுவே ஐந்தாம் வீட்டில் குரு இருக்கும்பொழுது ஒன்பதாம் வீட்டில் சூரியன் வந்தால் குரு வக்ர நிவர்த்தி பெறும். அதேபோல சூரியன் இருக்கக்கூடிய கட்டத்திலிருந்து 6,7,8ல் குரு இருப்பது ஒரு பலவீனமான அமைப்பாகும்.

அடுத்து ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் பெறும்பொழுது அவர் ஜாதகத்தில் திருமண வாழ்க்கை இல்லற வாழ்க்கையில் ஒரு சில இடையூறுகள் ஏற்படலாம். மேலும் உடல் ரீதியாக ஒரு சில குறைபாடுகள் கூட ஏற்படக்கூடிய நிலை உண்டாகி விடுகிறது. சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பொழுது இரண்டு டிகிரி அல்லது மூன்று டிகிரிக்குள் இருந்தால் இருவரும் இணைந்தாலே அஷ்ட தோஷம் என்று சொல்ல முடியாது. ஆனால் சூரியன், சுக்கிரன் ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் இணைந்தோ இரண்டு பேரும் ஒரே டிகிரி போல் இருந்தால் அது பாதிப்பு என சொல்லலாம்.

அதேபோல பெண் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் ஐந்தாம் வீடு. அப்படி குரு பகவான் நன்றாக இருந்து ஐந்தாம் அதிபதி ஒரு கேந்திர திரிகோண ஸ்தபதியாக அமையப் பெற்றிருந்தால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக உண்டாகிவிடும். அதுபோல குரு பகவான் நல்ல ஸ்தானத்திலிருந்து வக்கிரனாகப் பெற மறுத்தால் உறுதியாக குழந்தை பிறக்கும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் மிக முக்கியமானதாகும். அப்படி இருந்தால் வளமான பலன்கள் கண்டிப்பாக உண்டாகும். செவ்வாய் கேந்திர திரிகோணத்தில் இருந்து ஒரு சுப கிரக கிரகத்தினோடு சேர்ந்திருந்தால் ஒரு வளமான பலன்கள் உண்டாகும்.

அதே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரம் பெற்றிருந்தால் உடல் உபாதைகள், மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் உண்டாகக்கூடிய இடையூறுகள் ஏற்படும். மேலும் ஐந்தாவது வீட்டில் ஆண்கள் கிரகங்களுடைய ஆதிக்கம் பலமாக இருந்தால், அதாவது சூரியன், செவ்வாய், குரு போன்றவை ஆதிக்கம் நல்ல பலமாக இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை யோகம் உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு. அதுபோல ஆண் - பெண் இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் வீட்டில் பெண் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் வலுவாக இருந்தால் பெண் குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஐந்தாம் வீட்டில் சனி, ராகு, கேது இருக்கும் போது சிறிதளவு பாதிப்பை உண்டாக்கும். ஆனால் அப்படி முழுமையாக சொல்ல முடியாது. அது கூடவே ஐந்தாம் வீட்டின் அதிபதியான புத்திரக்காரர்கள் வக்கிரம் பெறும் பொழுது ஆண் குழந்தை பாக்கியம் ஏற்படுத்துவதில் சில இடையூறுகள் ஏற்படும். ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு பலமாக இருந்து குரு பகவான் இருந்தால் அழகிய குழந்தை பிறக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஒரு திருமணமான தம்பதிகளுக்கு உடனே கேது சம்பந்தப்பட்ட தசா புத்திகள், ராகு சம்பந்தப்பட்ட தசா புத்திகள் நடந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இடையூறுகள் உண்டாகும்.

அதுபோக ஒரு ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தால் அந்த குலதெய்வத்தை வழிபட்டால் நல்ல பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதாவது குரு பகவான் வக்கிரம் பெற்றுவிட்டார் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட முடியாது. அது கூடவே சுக்கிரனின் நிலை சூரியனின் நிலை ஐந்தாம் அதிபதி நிலை மூன்றாம் அதிபதி நிலை வைத்து முடிவு செய்ய வேண்டும். ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு வக்கிரம் பெற்றால் 3 ஆம் அதிபதியான சூரியன் பலமாக இருந்தால் கண்டிப்பாக குழந்தை உண்டாகும். இது போன்ற காரணத்தால் காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனே குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT