Skip to main content

தேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் !

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

மனித நாகரிகமும் பண்பாடும் ஆற்றங்கரைகளில் தோன்றி வளர்ந்தன என வரலாறுகள் கூறுகின்றன. ஆதிமனிதன் முதலிலில் உணவைத்தேடி ஓரிடம் விட்டு ஓரிடம் நகரத் தொடங்கினான். அச்செயல் தனக்கான உணவைத் தேடல், பிறகு தன் குழுவுக்கான உணவைத் தேடல் என விரிவடைந்தது. இவ்வுணவை நடந்தே சென்று தன் தலையிலும் இடுப்பிலும் சுமந்துவந்தான். பிறகு அருகில் தனது கட்டுப்பாட்டிலிருந்த விலங்குகளைப் போக்குவரத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் பயன்படுத்தினான்.நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் உணவுத்தேடலுடன் தன் அறிவால், புதிய தேடலால் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தான். அதன்பின் அதன் பயன்பாட்டையும் கண்டெடுத்தான் பிறகு இடம் விட்டு இடம் நகர்ந்தும், அதன் தொடர்ச்சியாக கடலிலில் பயணித்தும் தன் தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பிறகு ஒவ்வொரு துறையிலும் ஆளுமையை ஆழப்பதிக்கத் தொடங்கினான்.இடம்விட்டு இடம் நகரத் தொடங்கியவன் ஊரையும், உறவையும் கண்டான். அன்பினால் மனிதனை வென்றான். விலங்கினங்களை வென்றான். தனது உற்பத்தியை மற்றொரு இடத்திற்கு நகர்த்தினான்.
 

veichle

நகர்ந்துசென்ற இடத்திலிலிருந்து தனக்கான பொருள்களைத் தன் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்தான். ஓரிடம் விட்டு ஓரிடம் நகர்ந்து செல்வதற்கும், வாணிபத்திற்கும் ஆதியில் அவன் பயன்படுத்திய ஊர்திகள் சுற்றுச்சூழலோடு ஒத்திசைந்து இருந்தன. தனக்கும் தான் சார்ந்த இயற்கைச் சூழலுக்கும் எந்தவித இடையூறுமின்றி மிக நுட்பமான தன்மையுடையதாய் அது விளங்கியது.அந்த ஊர்திகளால் இரைச்சல் இல்லை, கரியமில வாய்வு இல்லை, மனிதன் சுவாசத்திற்கு எவ்வித சிக்கலுமில்லை. அவன் கட்டமைப்பு அவனுக்கு மட்டுமல்ல அவன் எதிரிக்கும் நன்மை பயத்தது. இன்று வளர்ச்சி என்று சொல்லிலி இயற்கையை சிதைத்து வருகின்றோம். இதனால் அண்டப்பெருவளி தூய்மையற்றதாய் மாறிவருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ்க்குடி மக்கள் தரைவழிப் பயன்பாட்டிற்கு ஊர்தியையும், கடல் வழிப் பயன்பாட்டிற்கு கலனையும் பன்படுத்திய விதம் மிகச்சிறப்புடையது.போக்குவரத்துப் பயன்பாட்டில் குதிரைமிக விரைவான போக்குவரத்து ஊர்திகள் இன்று உள்ளது போல் அன்று இல்லை. குதிரை, அத்திரி, எருது, கழுதை, போன்றவை தரைவழி போக்குவரத்திற்கும் தரைவழி வாணிபத்திற்கும் பயன்பட்டன.பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. குதிரைகள் சிந்து, பாரசீகம், அரபியா போன்ற நாடுகளிலிலிருந்து கலன்கள் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டன. குதிரை போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டதுடன், போக்குவரத்திற்கு குதிரைகளையும் குதிரைவண்டிகளையும் அரசர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தினர்.குதிரை வண்டிகள் தேர் என்று அழைக்கப்பட்டன

அத்திரி
கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர். இவை வெளிநாடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்டன. அன்று சமூகத்தில் செல்வ நம்பிகளாக இருந்தவர்கள் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினர். அத்திரிக்கு இராச ஊர்தி என்று பெயர் வழங்கப்பட்டது.கடற்கழி வழியாக அத்திரி ஊர்ந்து வரும் வழக்கம் இருந்தது என்ற செய்தியை,

கழிச்சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பிலும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே
(நற்றிணை 278-7-9)

kuthirai vaganam

என்கிறது. இப்பாடல் உணர்த்தும் பொருள் என்னவெனில் தலைவன் கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரிலே ஏறி வந்தான். அத்தேரின் சக்கரங்களின் கடற்கரையில் உள்ள சேறுபட்டது. தேரை இழுக்கும் கோவேறு கழுதைகளின் குளம்புகளில் சிவந்த இறாமீன்கள் சிக்கி அழிந்தன என்று பொருள் உணர்த்துகிறது. இப்பாடல் வழி கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரில் பயணிக்கும் வழக்கம் இருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.

அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய்மாச்
சகடமும், தண்டு ஆர; சிவிகையும் பண்ணி
வகைவகை ஊழ் ஊழ் கதழ்வு மூழ்ந்து (பரி 10-16-17)

அத்திரி, காளைப்பூட்டி வண்டி, அழகிய பல்லக்கு என இவற்றையெல்லாம் அழகுபடுத்தி, கூடிநின்று அவரவருக்கு உரியவற்றின் மேல் ஏறினர் என்கிறது இவ்வடிகள். இதன்மூலம் போக்குவரத்திற்கு அத்திரியுடன் காளைபூட்டிய வண்டியும் அழகிய பல்லக்கும் பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகின்றது. சிலம்பில் கடலாடு காதையில் கோவலன் கடலாடுதற்கு கடற்கரைக்குச் சென்ற போது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான்  என்று கூறுகின்றது.அரும்பத உரையாசிரியர் அத்திரிக்கு இராசவாகனமாகிய அத்திரி என்று உரை வகுத்துள்ளார். அடியார்க்கு நல்லாரோ அத்திரி, கோவேறு கழுதை. அது குதிரையில் ஒரு சாதி என்று குறிப்பிடுகின்றார்.ஆதித்தமிழர்கள் போக்குவரத்திற்கு குதிரை யையும், காளை பூட்டிய வண்டியையும்,அத்திரிகளையும் பல்லக்கையும் பயன்படுத்தி உள்ளனர்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.