ADVERTISEMENT

”இந்தப் பிரச்சனையெல்லாம் இருந்தால் இந்தப் பரிகாரங்களை செய்யுங்க” - ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் 

07:10 PM Jun 10, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், உடனடி தீர்வு தரும் பரிகாரங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

நம்முடைய பிரார்த்தனை மூலம் கேட்ட வரம் கிடைக்கச் செய்யும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் வெகுகாலமாக பரிகாரம் செய்ய யாரும் தயாராக இல்லை. நம்முடைய பிரார்த்தனை வேகமாக நிறைவேற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள்.

நிறைய பேருக்கு திருமணத்தடை இருக்கிறது. கைகூடி வரும் திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால் கடைசி நேரத்தில் கை நழுவிவிடும். திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் உள்ள கோவிலில் வாழை மரம் தலைவிருட்சமாக இருக்கிறது. அந்த வாழை மரத்திற்கு தாலி கட்டிய பிறகு அதனை வெட்டிவிடக்கூடிய சடங்கு நடைபெறும். இதை வாழைமர பூஜை என்பார்கள். இந்தச் சடங்கைச் செய்தால் திருமணத் தடை நீங்கும்.

சிலருக்கு ஜாதகத்தில் இருதாரமண அமைப்பு இருக்கும். அதாவது முதல் மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது. இந்த அமைப்பு உள்ளவர்களும் இந்த வாழைமர பூஜை செய்தால் அவர்களது திருமண வாழ்க்கை எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சிறக்கும்.

தீர்க்க முடியாத, மீள முடியாத பிரச்சனைகள் தீரவும், எதிரிகளை வெற்றி கொள்ளவும் ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் செய்யலாம். எப்பேர்பட்ட வலிமையான எதிரியையும் இந்த மிளகாய் யாகம் மூலம் வெற்றி கொள்ளலாம். பௌர்ணமி அல்லது செவ்வாய் கிழமைகளில் ப்ரத்யங்கிரா தேவியை வணங்கினால் இழந்த செல்வம் மீண்டுவரும்.

சிலர் நோய் வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையால் தீர்க்கவே முடியாத நிலையில் இருப்பார்கள். அவர்கள் உறுப்பு காணிக்கை செலுத்துதல் என்ற வேண்டுதலை வேண்டிக்கொண்டால் கை, கால் மற்றும் பிற உறுப்புகளில் உள்ள நோய்கள் நீங்கிவிடும். வலி நீங்கிய பிறகு வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்புகளை வாங்கி கோவில் உண்டியலில் செலுத்தலாம். இந்தப் பிரார்த்தனை சமயபுரம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் அதிக அளவில் நடக்கிறது.

எவ்வளவோ முயற்சித்தும் போட்டி தேர்வுகளில் தோல்வி ஏற்படுகிறது என்றால் சிறிய குதிரை சிலை வாங்கி அய்யனார் கோவிலில் சாத்தலாம். குதிரை சிலை வாங்கி அய்யனாருக்கு சாத்துவது காரியத் தடையை நீக்கி வெற்றியை ஏற்படுத்தும்.

பணம் வாங்கிக்கொண்டு நம்மை யாராவது ஏமாற்றினால் அந்தக் காசு திரும்பக் கிடைக்கவும் அவர்களுக்கு ஒரு தண்டனையை கொடுக்கவும் ஒரு பரிகாரம் இருக்கிறது. சிவகங்கைக்கு அருகே கொல்லங்குடி என்ற ஊரில் வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் சென்று காசு வெட்டினால் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும். இங்கு வந்து காசு வெட்டினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கட்டாயமாகத் தீர்ப்பு கிடைக்கும்.

பிராது கட்டுதல் என்று ஒரு பழக்கம் உள்ளது. ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதைப்போல கடவுளிடம் விண்ணப்பிக்கும் முறைதான் இந்தப் பிராது கட்டும் முறை. விருத்தாச்சலம் அருகே கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளது. நம்முடைய பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி முனியப்பர் சந்நதியில் உள்ள வேலில் கட்டினால் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறும். நான் மேலே சொன்ன பிரார்த்தனைகள் அனைத்தும் உடனடி பலன் தரக்கூடியவை. இந்தப் பரிகாரங்களைச் செய்து எல்லோரும் நலம் பெறுங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT