ADVERTISEMENT

உங்களுக்கு அரசு வேலையா? தனியார்துறையா?

10:55 AM Mar 26, 2019 | Anonymous (not verified)

சிவ. சேதுபாண்டியன்

லக்னத்திற்கு 10-ஆம் அதிபதியையும், எட்டாமதிபதியையும் பார்த்து ஒருவருக்கு அரசு வேலை கிட்டுமா அல்லது தனியார்துறையில் பணியா என்பதை அறியலாம். சனி பகவான், புதன் வீட்டிலோ அல்லது புதன், சனி வீட்டிலோ வரக் கூடாது. அப்படி வந்தால் அரசு வேலை கிடைத்தாலும் மூப்புவரை வேலை பார்க்கமுடியாது. இவ்வாறு ஜாதகம் அமையப்பெற்றவர்கள் அரசு ஊழியராக இராணுவ வேலைக்கு மட்டும் செல்லலாம். ஏனென்றால் 18 வயதில் ஒருவர் இராணுவத்தில் சேர்ந்தால் 15 முதல் 24 ஆண்டுகள்வரை பணிசெய்ய முடியும். பின்னர் தனியார் துறையில்தான் வேலைபார்க்க வேண்டும். 42 வயதுக்குள் ஓய்வுபெற்று விடுவார். தனியார்துறையாக இருந்தால் 60 வயதுவரை வேலை செய்யலாம்.

ADVERTISEMENT



குறிப்பாக, சனி வீட்டில் புதன் இருந்தாலும், புதன் வீட்டில் சனி இருந்தாலும் ராகு தசை வருவதற்கு முன்னர் விருப்ப ஓய்வில் (வி.ஆர்.எஸ்.) சென்றுவிட வேண்டும். அவ்வாறு செல்லவில்லையென்றால் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஜாதகர் கேது தசை, சுக்கிர தசையில் பிறந்திருந்தால் முன்னெச்சரிக்கையுடன் ராகு தசை வருவதற்கு முன்னர் விருப்ப ஓய்வில் சென்றுவிடவேண்டும். தனியார்துறை என்றால் கடைசிவரை பணியாற்றலாம். லக்னத்திற்கு 10-ஆமிடம் செவ்வாய் வீடாக இருந்தாலும், 10-ஆமிடத்தில் செவ்வாய் இருந்தாலும் மருத்துவத்துறையில் வேலைக்குச் செல்வார். லக்னத்திற்கு 12-ஆம் வீடு சந்திரன் வீடாக இருந்தாலும், 12-ஆம் வீட்டில் சந்திரன் அல்லது ராகு நின்றாலும் அந்த ஜாதகர் மத்திய அரசு வேலைக்கு அல்லது வெளிநாடு செல்வார்.

பத்தாமதிபதி சுக்கிரன் அல்லது புதனாக இருந்தாலும், 10-ஆம் வீட்டில் சுக்கிரன் அல்லது புதன் இருந்தாலும் ஆசிரியர் பணி அல்லது பல்கலைக்கழக வேலைக்குச் செல்வார். 10-ஆம் வீட்டில் புதன் உள்ளவர்கள் பொறியாளராகச் செல்வார்கள். மத்திய அரசுப் பணிக்கு அல்லது அயல்நாடு செல்வார்கள். சனி பத்தாமதிபதியாக இருந்தாலோ, லக்னத்திற்கு 10-ஆம் வீட்டில் சனி இருந்தாலோ- தண்டனையிடல் பணியான அரசு வேலைக்குச் செல்வார்கள். இவர்களே ஐ.பி.எஸ் ஆகவும், நீதிபதியாகவும் வருவார்கள். இவர்கள் அடிக்கடி குற்றவாளிகளை சந்திக்க வேண்டி வரும். ஒருசிலர் வழக்கறிஞராகவும் வரலாம். லக்னத்திற்கு 8-ல் சனி இருந்தாலோ, எட்டாமதிபதி சனியாக வந்தாலோ படிப்பை 12-ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு சீருடையணிந்த அரசுப் பணிக்குச் செல்லவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் பின்னாளில் வம்பு வழக்கில் சிக்கி குற்றவாளியாக சிறைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும்.

ADVERTISEMENT



லக்னத்துக்கு பத்தாமதிபதி குருவாக வந்து ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நகைக்கடை வைப்பார். அல்லது நகைத்தொழிலில் ஈடுபடுவார். லக்னத் திற்கு 10-ஆம் வீட்டில் குரு இருந்தாலும், ஆட்சி, உச்சமடையாவிட்டாலும் அவர் அரசுப் பணியில் இருக்கலாம். ஒருவேளை புதன் பத்தாமதிபதியாகி நீசவீடான மீனத்தில் இருந்துவிட்டால் அவர் நிறைய பொய் பேசுவார். பணம் காசு சேராது. புதன் நீசமாகிப் பிறந்த வர்கள் புதன் தசையில் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இப்படிப் பட்டவர்கள் அரசு ஊழியராக இருந் தாலும் தனியார்துறையில் இருந் தாலும் எப்பொழுதும் முன்னெச் சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

லக்னத்திற்கு பத்தாமதிபதி சூரியனாக இருந்தாலும், 10-ஆம் வீட்டில் சூரியன் இருந்தாலும் நெருப்பு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடியவர். உதாரணமாக டீக்கடை முதலாளியாகவும், வெல்டிங் பட்டறை வைத்திருப்பவராகவும் இருப்பார். மத்திய அரசுப் பதவியில் இராணுவத்தில் டாங்கிப்படையில் சிறந்தவராக விளங்குவார். ஒருசிலர் தனியார்துறைகளில் நூற்பு, துணி நெய்தல் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவர்.

லக்னத்துக்கு சுக்கிரன் எட்டாமதிபதியாக அமைந்தாலோ, 8-ஆம் வீட்டில் இருந்தாலோ பலவிதமான தொழில்களைச் செய்து முன்னேறுவார். குடும்பம் சீராக அமையாது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிலிப் பிரித்துவிடுவார்கள். தீய பழக்கங்கள் இவருக்கு ஏற்படும். தொழிலில் கெடுதல் வருவதால் அரசு ஊழியராக மட்டும் செல்லக்கூடாது. தனியார்துறைகளிலேயே வேலை செய்யவேண்டும்.

மேற்கண்டவை ஒழுங்காக அமையப்பெறா விட்டால் குரு வீட்டில் சனி வரக்கூடாது அல்லது சனி வீட்டில் குரு வரக்கூடாது. சனி- குரு பார்வையும் பெறக்கூடாது. இப்படி சில தோஷங்கள் இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால் நல்ல ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தைக் காண்பித்து அவரது ஆலோசனைப்படி நடந்து கொள்ளலாம்.

பரிகாரம்-1

கும்பகோணம் அருகிலுள்ள திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் தோஷ நிவர்த்தி செய்வதுண்டு. (காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை). பரிகாரக் கட்டணம் ரூ.750/- இதனை சம்பந்தப்பட்டவர்தான் செய்துகொள்ளவேண்டும்.

பரிகாரம்-2

மேற்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ள முடியாதவர்கள், அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு அமாவாசையன்று சென்று, 27 விளக்குகள் ஏற்றி வழிபட்டு வர, தோஷம் நீங்கி வேலைவாய்ப்பு கிட்டும். மூன்று அமாவாசைகள் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT