Skip to main content

வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு யாருக்கு ?

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

சிலருக்கு பிறப்பது ஒரு ஊர், படிப்பது ஒரு ஊர், வாழ்வது ஒரு ஊர், சம்பாதிப்பது ஒரு ஊர் என ஊர்ஊராய்ச் சென்று வாழும் வாய்ப்புண்டாகும். ஒருசிலர் பிறந்து வளர்ந்து படித்தது ஒரு ஊராக இருந்தாலும், சம்பாதிப்பதற்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். சொந்த ஊரில் மாதம் 10,000 ரூபாய்க்கு 12 மணிநேரம் கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், எட்டு மணி நேரத்தில் அயல்நாடுகளில் 40,000, 50,000 ரூபாய் சம்பாதித்துவிடுகிறார்கள். அயல்நாடுகளில் பணிபுரிவதைப் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.

 

murugan



வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளவும், குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு பணம் அனுப்புவோர்களில் எத்தனைப்பேர் தங்கள் சுகங்களைத் தொலைத்திருக்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். ஒருபுறம் ஏற்றத்தைக் கொடுக்கும் அயல்நாட்டு வாழ்க்கையானது, மறுபுறம் இறக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றால் மிகையாகாது. வெளிநாடு சென்று பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது எல்லாருக்குமே அமைந்துவிடுவதில்லை. சம்பாதிக்கும் ஆசையில் செல்லும் சிலர் எந்தவிதப் பலனையும் அடையாமலேயே ஊர் திரும்பினால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வெறுங்கையுடன் வந்துவிடுகிறார்கள்.

ஜோதிடரீதியாக அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் யோகம் யாருக்கு அமையும் என்று பார்த்தோமானால், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 9, 12-க்கு அதிபதிகள் பலம்பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ, ஒருவருக்கொருவர் பார்வை செய்தோ அமைந்திருந்தாலும்; 9, 12-க்கு அதிபதிகள் இணைந்து 9 அல்லது 12-ல் அமைந்திருந்தாலும் அவருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பயணங்களுக்குக் காரகனான சந்திரன் பலம்பெற்று, 9, 12-க்கு அதிபதிகளும் பலம்பெற்றிருந்தால் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் அமைப்பு, பயணங்களால் அனுகூலம், அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

 

murugan



இதுமட்டுமின்றி, 9, 12-க்கு அதிபதிகளுடன் 10-ஆம் அதிபதி இணைவது அற்புதமான ராஜயோகமாகும். இதனால் ஜாதகருக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்கள்மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். 9, 12-க்கு அதிபதிகள் இணைந்து ஜல ராசிகள் என கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் அமையப்பெற்றால் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்புண்டாகும். 9, 12-க்கு அதிபதிகள் பலம்பெற்றிருந்து, 9 அல்லது 12-ல் சனி அல்லது ராகு அமையப்பெற்று, அதன் தசை நடைபெற்றாலும், 9, 12-க்கு அதிபதிகளுடன் சனி அல்லது ராகு இணைந்து தசை நடைபெற்றாலும் கடல்கடந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு, வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்கும் அமைப்புண்டாகும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் 2-க்கு மேற்பட்ட கிரகங்கள் 9, 12-ல் பலமாக அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றால் வெளியூர், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் வாய்ப்பும், அதன்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும். ஒருவருக்கு 9, 12-ஆம் ஸ்தானங்கள் பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாவதைப்போல, 3, 6-ஆம் அதிபதியும் பலம்பெற்றிருந்தால் குறுகியகால பயணங்கள்மூலம் சம்பாதிக்கும் அமைப்பு, அடிக்கடி பயணங்கள் ஏற்படும் அமைப்புண்டாகும்.

குறிப்பாக ஒருவருக்கு சந்திர தசை அல்லது புக்தி நடைபெற்றால் அடிக்கடி தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு அமையும். அத்தகைய யோகங்கள் இருந்தாலும், அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது முக்கியமானதாகும். இந்த தசாபுக்திக் காலங்களில் கோட்சார ரீதியாகவும் குரு, சனி போன்ற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்டமுடியும். ஒருவருக்கு சாதகமான தசாபுக்தி நடைபெறும் காலங்களில் கோட்சார ரீதியாக ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடைபெற்றாலும், குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரத் தடையும் உண்டாகும்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.