ADVERTISEMENT

இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்த பெண்... அதிர்ச்சியில் உறவினர்கள்!

11:58 PM Jan 09, 2020 | suthakar@nakkh…

பாகிஸ்தானில் இறந்ததாக கூறப்பட்ட பெண் மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் ரஷிதா என்பர் உடல்நலக் குறைவு காரணமாக கராச்சியில் உள்ள அப்பாஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு உடலிநிலை மோசமடையவே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் இறந்துவிட்டதாக கூறி, மருத்துவர்கள் அவருக்கு இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர்.


ADVERTISEMENT


எனவே அவரின் உடலை எடுத்துக்கொண்டு அவரது உறவினர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவருக்கு மாலை யில் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவரின் கால்கள் ஆட ஆரம்பித்துள்ளது. எனவே பயந்து போன அவரது உறவினர்கள் அவரின் நாடியை பிடித்து பார்த்து அவருக்கு உயிர் இருப்பதை உறுதி செய்தனர். தற்போது அவர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT