ADVERTISEMENT
ADVERTISEMENT
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்படுள்ளது. இதனால் மாலி அதிபர் இப்ராஹிம் மற்றும் பிரதமர் சீஸேவை ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைதை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகிய இப்ராஹிம், மாலி நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.
பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டத்தாகவும் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்நாட்டு அதிபர் பதவி விலகக்கோரி மாலியில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அதிபர் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments