ADVERTISEMENT

வானில் தோன்றிய கருப்பு வளையம்... ஏலியன்ஸ் வருகை என பொதுமக்கள் பீதி! (வீடியோ)

09:15 AM Jan 23, 2020 | suthakar@nakkh…


வானில் தோன்றிய கருப்பு வளையத்தால் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே பல்வேறு யூகங்கள் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வானில் கருப்பு வளையம் தோன்றியது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்த கருப்பு வளையத்தை பார்த்த பொதுமக்கள் பலர், ஏலியன்கள் அதில்தான் வருவார்கள் என்று பீதியை கிளப்பியுள்ளார்கள்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

என்ன காரணத்துக்காக இத்தகைய வளையங்கள் தோன்றின என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதை போன்று சில மாதங்களுக்கு முன் கஜகஸ்தான் நாட்டிலும் கருப்பு வளையம் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், எதற்காக இந்த வளையங்கள் தோன்றுகின்றது என்பதை மட்டும் அவர்கள் இதுவரை வெளிப்படையாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT