ADVERTISEMENT

30க்கும் பேற்பட்டவர்கள் பலி;தொடரும் மீட்புப்பணிகள் - மோசமான இரயில் விபத்தை சந்தித்த தைவான்!

01:35 PM Apr 02, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தைவான் நாட்டின் தைபே பகுதியிலிருந்து தைதுங்கிற்கு சென்ற விரைவு ரயில், சுரங்கப் பாதைக்குள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தபோது, கிட்டத்தட்ட 350 பேர் அந்த இரயிலில் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 36 பேர் பலியாகிவுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. மேலும் 98 பேர் வரை இந்த விபத்தில் காயமடைந்திருப்பதாகவும் அந்நாடு கூறியுள்ளது.

இந்த விபத்தின்போது, இரயில் பெட்டிகள், சுரங்கப் பாதையின் சுவரில் மோதியதாகவும், 70க்கும் மேற்பட்டவர்கள் சுரங்கத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில பத்தாண்டுகளில், தைவானில் நடைபெற்ற மோசமான ரயில்விபத்தாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT