Skip to main content

தென்காசியில் பெண் கேட் கீப்பருக்கு பாலியல் வன்கொடுமை; கேரளாவை சேர்ந்த கொடூரன் கைது

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Female gatekeeper assaulted in Tenkasi; A brutal man from Kerala arrested

 

பணியிலிருந்த ரயில்வேயின் இளம் பெண் ஊழியரிடம் அத்துமீறி அவரைச் சிதைக்கும் வகையில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தென்மாவட்டங்களில் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்த நிலையில் அது தொடர்பான மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தென்காசி மாவட்டத்தின் தென்காசி சமீபமாக உள்ள பாவூர்சத்திரம் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் மெயின் ரயில்வே கேட் உள்ளது. இதன் கேட் கீப்பர் பணியிலிருப்பவர் அண்டையிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் நகரைச் சேர்ந்த 30 வயதான இளம்பெண். (நீதிமன்றத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படம் தவிர்க்கப்பட்டுள்ளன)

 

திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வெளியூரில் பணிபுரிந்து வருபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேட் கீப்பர் பணிக்காக வந்த இந்த இளம்பெண் பாவூர்சத்திரத்தில் தன் தாயுடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். நெல்லை-செங்கோட்டை புனலூர், கொல்லம் என்று ரயில்களின் போக்குவரத்துகளைக் கொண்ட மெயின்லைன் வழியானது பாவூர்சத்திரம் ரயில்வே கேட். எனினும் நகரையொட்டிய பகுதி என்பதால் ஓரளவு ஜன நடமாட்டமும் கொண்டது.

 

பிற துறைகளில் பெண் ஊழியர்களுக்கென்று இரவுப்பணி தவிர்த்து பணியின் காலஅளவு கடைப்பிடிக்கிற வழக்கமிருப்பதைப் போன்று ரயில்வே துறையில் அந்த நியாய தர்மங்கள் பின்பற்றப்படுவது கிடையாது. இரவைப் பகலாக்கும் நகரம் என்றாலும், அடர் இருட்டைக் கொண்ட ரிமோட் பகுதி என்றாலும், ரயில்வே துறையில் அதுவும் கேட் கீப்பர் வேலை என்றாலும் பெண்களுக்கு இரவு மற்றும் பகல் நேர ஷிப்ட்கள் தவிர்க்க முடியாதது என்கிறார்கள்.

 

Female gatekeeper assaulted in Tenkasi; A brutal man from Kerala arrested

 

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வழக்கம்போல் இரவுப் பணிக்கு வந்துள்ளார் பெண் ஊழியர். அன்றைய தினம் இரவு சுமார் 8.30 மணிக்கு நெல்லை-செங்கோட்டை செல்கிற ரயில் அப்பகுதியைக் கடந்த போது ரயில்வே கேட் கீப்பிங் பணியை முடித்தவர், அடுத்ததாக நடு இரவு 12.30 மணிவாக்கில் அந்த வழியில் கடக்கவிருக்கிற நெல்லை–கொல்லம் மெயிலுக்கான கேட்கீப்பிங் பணியின் பொருட்டு அங்குள்ள தனது ரெஸ்ட் ரூமுக்கு போயிருக்கிறார்.

 

அதுசமயம் எதிர்பாராமல் திடீரென சட்டை அணியாமல் வந்த மர்ம நபர் ஒருவர், அறைக்குள் தடாலடியாய் புகுந்தவர் பெண் ஊழியரைப் பாலியல் வன்கொடுமை செய்து, சிதைக்கிற முயற்சியில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டவன், அப்பெண் ஊழியரை மல்லுக்கட்டியிருக்கிறான். ஆனாலும் அதிர்ந்து போன பெண் ஊழியர் தன் தைரியத்தை விடாமல், அவனோடு எதிர்த்துப் போராடியிருக்கிறார். ஆளரவமற்ற ஏரியா என்றாலும், பெண் ஊழியருக்கும் அவனுக்குமிடையே பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. ஒரு லெவலுக்கு மேல் போனதும் பதறிய பெண் ஊழியர், காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுள்ளார். இதனால் பீதியாகிப் போனவன் அருகிலிருந்த தொலைபேசியால் பெண் ஊழியரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியிருக்கிறான்.

 

இந்தப் போராட்டத்தில் பெண் ஊழியருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு பதறிப் போய் வந்த பொது மக்களும், ரயில்வே ஊழியர்கள் சிலரும் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். தன் உறவினர் உதவியுடன் பாவூர்சத்திரம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பின்னர் காலையில் நெல்லையிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கிறார்.

 

விடிந்த பிறகே போலீசுக்குத் தகவல் தெரியவர, தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சாம்சன், டி.எஸ்.பி.சகாய ஜோஸ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பதற்றத்துடன் சம்பவ இடம் வந்தவர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

 

எனினும் போலீசாரின் விசாரணை வேகமெடுத்துள்ளனவாம். ரயில்வே கேட் மற்றும் வழியோரப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் சட்டை அணியாமல் வந்த மர்ம நபரின் உருவம் பதிந்துள்ளதா என போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வந்த போதிலும் ரயில்வே கேட் அருகிலுள்ள நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. அந்தப் பணிக்காக ரயில்வே கேட்டின் அருகில் வடமாநிலத் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடாரம் அமைத்து தங்கி வேலையில் ஈடுபட்டுள்ளனர். வாய்ப்பைப் பயன்படுத்தி பெண் ஊழியரின் பணிநேரத்தை நோட்டமிட்டு இவர்களில் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா அல்லது உள்ளூர் நபரின் ஈடுபாடா என்ற கோணத்திலும் விசாரணை போகிறது. ஏனெனில் பெண் ஊழியரின் தனிமையைப் பல நாட்கள் கண்காணிக்காமல், சம்பவம் நடக்க சாத்தியமில்லை என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

 

வன்கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி ரயில்வே போலீசாரிடம், “வந்தவனை எனக்கு நல்லா தெரியும். ஒல்லியாயிருப்பான். சட்டை போடல. காக்கி கலர் பேண்ட் போட்டிருந்தான். முரட்டுத்தனமா நடந்துக்கிட்டவனிடம் என்னைக் காப்பாற்ற முழு பலத்துடன் போராடினேன். போதையிலிருந்தவன், வெளியே சொன்னா கொன்னுடுவேன்னு மெரட்டினான். ஆளைப் பார்த்தால் அடையாளம் சொல்லிவிடுவேன்” என ஒரு சில அடையாளங்களைச் சொல்லி வாக்குமூலமே கொடுத்திருந்தார் அந்த பெண் ஊழியர்.

 

11 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் சில அடையாளங்களோடு வந்த மர்ம நபர் அங்கு விட்டுச் சென்ற அவனது ஒற்றைச் செருப்பைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் பெயிண்ட் அப்பியிருந்தது. இதனை வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கேட் கீப்பர் இளம்பெண் தெரிவித்த அடையாளங்களைக் கொண்டு தென்காசி ரயில்வே போலீசார் அப்பகுதியின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள்.

 

Female gatekeeper assaulted in Tenkasi; A brutal man from Kerala arrested

 

நல்வாய்ப்பாக சொல்லப்பட்ட அடையாளம் கொண்டவனின் பதிவான காட்சியை போலீசார் அந்த இளம்பெண்ணிடம் காட்டியிருக்கிறார்கள். அவரும் வந்தவன் அவன் தான் என்று உறுதி செய்திருக்கிறார். மேலும் தீவிர விசாரணையில் அவனுடைய பெயிண்ட் படிந்த செருப்பின் அடையாளத்தைக் கொண்டு பெயிண்ட் அடிப்பவன் என்ற முடிவுக்கு வந்த போலீஸ் அப்பகுதியின் தொழிலாளிகளிடம் விசாரித்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்த கேரளாவின் கொல்லம் பக்கம் உள்ளவன், சம்பவத்திற்குப் பின் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது.

 

இதையடுத்தே ரயில்வே போலீசின் தனிப்படை கொல்லம் விரைந்தார்கள். கொல்லம் மாநகர காவல் நிலையத்தில் அடையாளங்களைக் காட்டி விசாரித்ததில், அவனது பெயர் அனீஸ் (28). வாலிபனான இவன் மீது கொல்லம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையங்களில் பாலியல் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கொல்லம் பகுதியை ஒட்டிய குன்னிக்கோடு காவல் நிலையத்தில் குற்ற எண் 1355/18-ன் படி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி தண்டனையடைந்தவன். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்தான் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்தே கேரள போலீசாரின் உதவியுடன் பிப்ரவரி 19 இரவு பத்னாபுரம் தாலுகாவிலிருக்கும் வாழவிளை வென்சேம்பு ஊரிலுள்ள அவனது வீட்டிலிருந்த அனீஸை மடக்கிக் கொண்டு வந்த ரயில்வேயின் தனிப்படையினர் விசாரணைக்குப் பின் தென்காசியிலுள்ள ஜே.எம்.கோர்ட்டில் ஆஐர்படுத்தி ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.