ஐரோப்பிய தமிழர்கள் தினம் ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களால் டிசம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதனையொட்டி ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 சிலைகள் நிறுவப்பட்டன. தமிழர் மரபு அறக்கட்டளை சார்பில் இந்த சிலைகள் அங்கு நிறுவப்பட்டன. இந்த விழாவில் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments