ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Show comments