ADVERTISEMENT
ADVERTISEMENT
தைவானில் 366 பயணிகளுடன் தாய்துங் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த புயுமா விரைவு இரயில் ஷின்மா இரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. 132 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இரயிலுக்கு அடியில் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்ப்பு பணியில் 120 வீரர்களை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் களமிறக்கியுள்ளது. இந்த விபத்திற்கு அந்நாட்டு அதிபர் திசாய் இங் வென் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Show comments