ADVERTISEMENT

இலங்கையில் நவம்பர் 5 நாடாளுமன்றம் கூடும்- ராஜபக்சே

03:37 PM Nov 01, 2018 | santhoshkumar


இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டதை அடுத்து, அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிபர் சிறிசேனா, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்க உத்தரவுப் போட்டார். நாடாளுமன்றம் முடக்கப்பட்டதிற்கு எதிர்ப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் முன்பு போராட்டங்களை நடத்தினர். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் நாடாளுமன்றம் முடக்கியதை வன்மையாக கண்டித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அதிபர் சிறிசேனா இன்று நாடாளுமன்ற முடக்கத்தை தளர்த்தியுள்ளார். வருகின்ற 5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட உள்ளதாக பிரதமர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT