ADVERTISEMENT

பிரிட்டிஷ் ராணி இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் இலங்கை அதிபர்!

10:07 PM Sep 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் இலங்கை அரசின் சார்பாக, அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்க உள்ளார். ராணி மறைவையொட்டி, வரும் செப்டம்பர்- 19 ஆம் தேதி அன்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

1972- ஆம் ஆண்டு இலங்கை குடியரசு ஆகும் வரை அந்நாட்டு ராணியாக இரண்டாம் எலிசபெத் இருந்தார். 1954 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு ராணி பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT