இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டில் நடைபெற்ற 16வது ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், கரோனா பெருந்தொற்று, கரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பெருநிறுவனங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி விதிக்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.