ADVERTISEMENT

ஆன்லைன் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுடன் அனுமதி!

01:03 PM Apr 15, 2020 | suthakar@nakkh…


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளைத் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20 தேதிக்குப் பிறகு சில தொழிற்சாலைகளை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்படவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யவும் அந்நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதில் பிரச்சனைகள் இருப்பதால், ஆன்லைன் தளங்களில் வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதற்கான வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT