ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா தொற்றைத் தடுக்க வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது ஆபத்தாக முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்தில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் காணொளி காட்சி வாயிலாக கூறுகையில், "பல நாடுகளில் கரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. 3வது அலை குறித்த எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டுவருகிறது. கரோனா பரவலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதம். தற்போது தடுப்பூசிகளைக் கலந்து போடுவது, பொருத்திப் பார்ப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது ஆபத்தானது, இதுபற்றிய தரவுகள் நம்மிடம் இல்லை. எனவே இத்தகைய விபரீத வேலைகளில் யாரும் ஈடுபட கூடாது" என்றார்.
Show comments