இங்கிலாந்து நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த வங்கியாக 'பேங்க் ஆப் இங்கிலாந்து' வங்கி (BANK OF ENGLAND)திகழ்கிறது. இந்த வங்கி முந்தைய காலங்களில் தனியார் வங்கியாக இருந்த நிலையில் , தற்போது இங்கிலாந்து அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் "பேங்க் ஆப் இந்தியா" ஆளுநராக உள்ள 'மார்க் கார்னே' பதவிக்காலம் அடுத்த (2020) வருடம் ஜனவரி 31 ஆம் தேதி முடிவடையும் நிலையில் அடுத்த ஆளுநரை நியமிக்க இங்கிலாந்து அரசு திவீரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் பெயரை அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளதாக இங்கிலாந்து நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தற்போது ரகுராம் ராஜன் யூனிவர்சிட்டி ஆப் சிகாகோ பூத் பிசினெஸ் ஸ்கூல் (UNIVERSITY OF CHICACO BOOTH BUSINESS SCHOOLS) பணியாற்றி வருகிறார். இந்திய ரிசர்வ் வங்கியில் 23-வது கவர்னராக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பணியாற்றினார். உலகளவில் பொருளாதாரத்தில் சிறந்த வல்லுனரான ரகுராம் ராஜன் திகழ்கிறார். அதே போல் இவரது பணிக் காலத்தில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது .. இவருக்கு 2019- ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான பரிந்துரையில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இந்தியர் இங்கிலாந்து வங்கியில் ஆளுநராக நியமிப்பது இதுவே முதல் முறை.
Show comments