சீனாவை சேர்ந்த யா என்ற பெண் யூடியூப் எனப்படும் சமூக காணொளி வலைதளத்தில் பாப்கான் எப்படி தயாரிப்பது என்று வீடியோவை பதிவிட்டுள்ளார். காலியான பெப்சி டின் பாட்டிலை கொண்டு எப்படி பாப்கான் தயாரிப்பது என்ற வீடியோவை அவருடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சிறுமியின் இந்த உயிரிழப்புக்கு யூடியூபில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ பதிவுதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு வீடியோவை வெளியிட்ட அந்த இளம்பெண் இழப்பீடு வழங்கியதோடு மன்னிப்பும் கோரியுள்ளார். எச்சரிக்கை வாசகம் வீடியோவில் குறிப்பிடப்படாதது தன்னுடைய தவறுதான் என்றாலும் சிறுமி தான் பதிவிட்ட வீடியோவில் உபயோகப்படுத்திய உபகரணங்களை பயன்படுத்தாமல் ஆல்கஹால் டின்னை பயன்படுத்தினால்தான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.