ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த திங்கள் கிழமை, யூ-ட்யூப், ஜி-மெயில், கூகுள் பிளே எனக் கூகுள் நிறுவனத்தின் சேவைகள் திடீரென முடங்கின. கூகுள் நிறுவனத்தின் முயற்சியால் சிறிது நேரத்தில், முடங்கிய சேவைகள் இயங்கத் தொடங்கின.
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கூகுள் சேவைகள் முடங்கியதால், கூகுள் நிறுவனம் மீது சைபர் அட்டாக் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் கூகுள் நிறுவனம், தனது சேவைகள் முடங்கியது குறித்து விளக்கமளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், உலகம் முழுவதும் திடீரென அதன் சேவைகள் முடங்கக் காரணம், அதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் (சேமிப்பு) அமைப்பிலும், ஆத்தென்டிகேஷன் (தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்வது) செயல் முறையிலும் ஏற்பட்டக் கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments