அதன் பின் இன்னொரு அதிர்ச்சித்தகவல் வெளிவந்தது அதில் ஹாக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் எதுவும் அரசியல் நோக்கங்களுக்காக ஹாக் செய்யப்படவில்லை மாறாக நிதி சம்பந்தமாகதான் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஹாக் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் போலியான மார்க்கெட்டிங் நிறுவனங்களால் ஸ்பம் (spam) வழியில் பொய்யான நிதிதகவல்களை அளித்து, அந்த நிறுவனங்கள் மூலமாகத்தான் இந்த ஹாக் நடந்தது என்றும் அறிவித்தது. இந்த நிலையில் ஃபேஸ்புக் இறுதியாக சொன்ன நிதி சம்பந்தமாகத்தான் ஹாக் நடந்திருக்கிறது. ஃபேஸ்புக் ஹாக்கர்ஸ் 120 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் கணக்குகளில் உள்ள தனிப்பட்ட குறுந்செய்திகளை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இதில் 81,000 நபர்களின் குறுந்செய்திகளை ஏற்கனவே விற்பனை செய்யும் முனைப்புடன் இணையத்தில் வெளியீட்டுள்ளனர். அதில் ஒரு குறுந்செய்திக்கு 10 சென்ட் எனவும் அறிவித்துள்ளனர். உக்ரைன், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கணக்குகளே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.