Skip to main content

“உழைக்காமல் கஷ்டப்படாமல் பணம் கொட்டும்!” -முகநூல் தோழிகளிடம் நகை பூஜை மோசடி!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்..’

-இந்த கிராமத்துச் சொலவடை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொருந்திப் போகுமோ? அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

 

சாத்தூரைச் சேர்ந்த ராஜ்குமாரும் நவீன்குமாரும் கில்லாடி இளைஞர்கள். தங்களின் மோசடியான செயலுக்கு முகநூலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முகநூல் நட்பு என்ற பெயரில் பெண்களுக்கு வலை விரிப்பதும், அவர்களை ஏமாற்றுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. ராஜ்குமாரும் நவீன்குமாரும் அந்த ரக ஆண்கள் அல்ல. வசதி படைத்த பெண்களிடம் பெண் குரலில் பேசி தோழிகள் ஆகிவிடுவர். “நாங்க சீரியல் நடிகைகளாக்கும்..” என்று பெண்களின் பலவீனம் அறிந்து பேசுவார்கள். இவர்களின் சுவாரஸ்யமான பேச்சில் முகநூல் தோழிகள் லயித்து, நம்பிக்கை வைத்தவுடன் “ஒரு கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உங்கள் வீட்டு நகைகளை அக்கோவிலில் வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகி தொடர்ந்து நல்லதே நடக்கும்.” என்று தூண்டில் போட்டிருக்கின்றனர். கடுமையாக உழைத்திடாமல், எந்தக் கஷ்டமும் படாமல்,  பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு எளிதான வழி இருக்கிறதென்று இவ்விருவரும் உருகி உருகிச் சொன்னதை, அப்படியே நம்பிவிட்டனர் அந்த முகநூல் தோழிகள். பிறகென்ன? தோழிகளின் நகைகளெல்லாம் பறிபோயின.

 

police

 

இரண்டு மாதங்களுக்கு முன் சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராதிகாவும் செண்பக பவானியும் மோசடியால் தாங்கள் நகைகளை இழந்தது குறித்து புகார் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, கைபேசி எண் மூலம் ‘ட்ரேஸ்’ செய்தபோது, ராஜ்குமாரும் நவீன்குமாரும்தான் அந்த மோசடிப் பேர்வழிகள் என்பது தெரிந்துபோனது. தனிப்படையினர் இவ்விருவரையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 61 பவுன் நகைகளையும், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.   

 

police

 

 

 

police

 

 

police

 

இதே ரீதியில், இவ்விருவரும் பல பெண்களிடம் பேசியே பணத்தைக் கறந்திருக்கின்றனர். யார் யாரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணை  தொடர்ந்து நடக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.