இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடபட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள சுலவேசி தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த 6.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்திற்கு பிறகு தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 5000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments