ADVERTISEMENT
ADVERTISEMENT
அலிபாபா நிறுவனத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, கடந்த வருடம் ஒரு மாநாட்டில் சீன அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாக அலிபாபா நிறுவனம் செய்த முதலீடுகள் குறித்து விசாரணையில் இறங்கியது.
இந்த நிலையில் ஜாக் மா, காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாக் மா தனது சொந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்காததை தொடர்ந்து, அவர் காணாமல் போய்விட்டதாக வந்த தகவல்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT
Show comments