Skip to main content

ராமேஸ்வரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சீன வாலிபர்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

சீன பயணிகள் இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், அனைவரையும் ஏமாற்றிவிட்டு ஹாயாக திரிந்த சீன வாலிபரை பிடித்து ராமேஸ்வரத்திலிருந்து மறுபடியும் சீனாவிற்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய தூதரகம்.

 

corona virus - Chinese youth - Rameswaram

 



கடந்த இரண்டு மாதங்களாக சீனா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை. சீன நாட்டிலிருக்கும் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகிலுள்ள பல நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் பல நாடுகள் தங்களுடைய நாட்டிற்கு சுற்றுலா வர சீனப் பயணிகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில், சீனாவும் தங்களுடைய மக்கள் வெளிநாடுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில், பலர் அரசை ஏமாற்றிவிட்டு சுற்றுலா எனும் பெயரில் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.

இவ்வேளையில், தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உசிங்க் எனும் சீன வாலிபர் ஹாங்காங் பகுதியிலிருந்து கடந்த 28 ஆம் தேதி விமானம் மூலமாக கொல்கத்தா வந்து இறங்கி, அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு பயணமாகி பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கின்றார். இறுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்திருந்த அவர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இத்தகவல் விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் காவல்துறையினருக்கு தெரியவர, இதனையடுத்து தங்கும் விடுதிக்கு வந்த காவல்துறையினர், வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட சீன வாலிபரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதா.? என ஆய்வினையும் மேற்கொண்டனர்.

மருத்துவ பரிசோதனை முடிவுகளின் படி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவர, இவ்வளவு பாதுகாப்பு உள்ள சீன வாலிபர் தமிழ்நாட்டில் ஹாயாக சுற்றித்திரியக் காரணமென்ன.? என்கின்ற கேள்வியுடன் உடனடியாக தனி வாகனம் மூலமாக போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் அவரை மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்  மதுரையில் இருந்து ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருந்து சீனாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது இந்தியத் தூதரகம் என்கின்றனர். விபரமறிந்தவர்கள். சீன வாலிபரின் ராமேஸ்வர வருகையால் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படடிருக்குமோ என பதட்டமடைந்துள்ளனர் அங்குள்ள மக்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.