சிறுவன் ஒருவனை முள்ளம்பன்றி பின்தொடர்ந்து செல்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்களுக்கு விலங்குகள் மீதான பாசம் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நாய், பூனையில் ஆரம்பித்து சில பேர் காட்டு விலங்குகளை கூட வளர்த்து வருகிறார்கள். யானை வளர்ப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் முள்ளம்பன்றி ஒன்று சிறுவனின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு அவரோடு செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
சிறுவனின் வீட்டில் முள்ளம்பன்றியை வளர்க்கிறார்கள் என்பதை அவர் பின்னால் முள்ளம்பன்றி கட்டுக்கோப்பாக செல்வதை வைத்து அறிந்துகொள்ள முடிகிறது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலர் போக்கிமானில் வரும் குட்டி விலங்கு போல் இருப்பதாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சிறுவனின் வீட்டில் முள்ளம்பன்றியை வளர்க்கிறார்கள் என்பதை அவர் பின்னால் முள்ளம்பன்றி கட்டுக்கோப்பாக செல்வதை வைத்து அறிந்துகொள்ள முடிகிறது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலர் போக்கிமானில் வரும் குட்டி விலங்கு போல் இருப்பதாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
Show comments