ADVERTISEMENT

கொரோனா வைரஸ் தாடி வைத்திருந்தால் எளிதில் பரவுமா..? - அமெரிக்க நோய்தடுப்பு துறை விளக்கம்!

08:35 AM Feb 28, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


ADVERTISEMENT


இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் விலங்குகள் மூலமாகவே மனிதனுக்கு பரவுவதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தாடி வைத்திருப்பவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் வாய்ப்பு ஏற்படுவதாக ஒரு செய்தி பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புதுறையினர் மேற்கொண்ட ஆய்வில் முகமூடி அணிந்து சென்றாலும் தாடியும், மீசையும் நோய் பரவலை எளிமையாக்குவதாக தெரிவித்துள்ளார்கள். ஷேவ் செய்து கொள்வது நல்லது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT