ADVERTISEMENT

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்! கொலையில் முடிந்த சகோதரர்களின் கோபம்! 

11:25 AM Jun 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி அரியமங்கலம் ஹவுசிங் போர்டு பகுதியில் ரிஷி என்ற 19 வயது இளைஞர், கடந்த 12ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாகத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ், திருச்சி திருவெறும்பூர் கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார், மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று வாலிபர்கள் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். அதேபோல், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரைக் கைது செய்தனர். மேலும் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன், புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்திற்குச் சிறையிலிருந்து திட்டம் தீட்டிய கமலக்கண்ணன், சரவணகுமார் ஆகியோர் மீது தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து பிடிபட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ரிஷி தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருடைய தங்கையைக் காதலித்துள்ளார். அதேபோல் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணகுமார் என்பவருடைய தங்கையையும் காதலித்துள்ளார். இதையடுத்து தனது தங்கையைக் காதலிப்பது குறித்து ஹரிஷ், சிறையில் உள்ள தனது நண்பரான சரவணகுமாரிடம் கூறியுள்ளார். அதேபோல் சரவணகுமார் தனது தங்கையை ரிஷி காதலிப்பதாக ஹரிஷிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திட்டம் தீட்டி தங்கள் நண்பர்கள் உதவியுடன் இந்த கொலையைச் செய்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT