அதன் பிறகு சனிக்கிழமை இரவே கே.கே.செல்வக்குமார் படத்துடன் எடப்பாடி பழனிசாமி படமும் போட்ட வரவேற்பு பதாகைகள் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு கொடிகளும் நடப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை அதிமுகவினர் கே.கே.செல்வகுமாரின் கொடிகளை பிடுங்கி எரிந்துவிட்டு அதிமுக கொடிகளை நட்டு வைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் பிரதானச் சாலையில் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு திரண்ட தமிழர் தேசம் கட்சியினர், இளைஞர்கள் தங்கள் கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடு என்று திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரம் மறியல் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த எடப்பாடியின் வாகனத்தை மறித்து நிறுத்திவிட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவரின் கார் மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் பட்டுக்கோட்டையில் எழுந்துள்ள இந்த பிரச்சனையால் நாடாளுமன்றத் தேர்தல் பாதிக்குமோ என்று ஆலோசனை அதிமுகவினர் செய்து வருகின்றனர். அதிமுக மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் இது நடந்திருக்காது. எங்கள் கொடியை அகற்றியவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.