ADVERTISEMENT

பள்ளி மாணவியை கடத்தி கட்டாயத் திருமணம்; வாலிபர் போக்சோவில் கைது!

11:04 AM Mar 24, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வடுகாசம்பட்டியைச் சேர்ந்த 15 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஊத்தங்கரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரில், ஆலந்தூர் அருகே உள்ள செங்கம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் இயந்திர இயக்குநராக வேலை செய்து வரும் சதீஷ் (24) என்பவர் தங்கள் மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறியிருந்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT