Skip to main content

45 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்; சிட்டிசன் பட பாணியில் சிக்கித் தவிக்கும் கிராமம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Villagers in Krishnagiri have been suffering without roads for 45 years

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாலையும் மாணவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் தங்களின் குழந்தை வீடு திரும்புவார்களா? என்ற அச்சத்தில் வாழ்வதை விட, தன் குழந்தை உயிருடன் இருந்தால் போதும் எனப் பள்ளிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோரால் வருங்கால தலைமுறையினரின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்டது போகிபுரம் கிராமம். சூளகிரி - சின்னாறு அணையைக் கட்ட காமநாயக்கன்பேட்டை, ஒண்டியூர், போகிபுரம் ஆகிய கிராம மக்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டு காமராஜர் காலத்தில் அணை கட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில் அணைக்கு மத்தியில் போகிபுரம் என்கிற கிராமத்தின் ஒரு பகுதி வெளியேற்றப்படாமல் அங்கேயே இருந்துகொள்ள அரசு அனுமதித்திருந்தது. சிறு குடும்பங்களாக இருந்தவர்கள் தற்போது 100 குடும்பங்களாக வளர்ந்துள்ளனர். ஆனால் வாக்குரிமை, ரேசன் கார்டு என இந்திய குடிமகனுக்கான அனைத்து உரிமமும் இருந்தும் ஒற்றைப் பாதை இல்லாமல் எந்த  அடிப்படை வசதிகளும் பெற முடியாமல் சொந்த மண்ணுக்குள்ளே அகதிகளாக வாடுகிறார்கள். 

 

Villagers in Krishnagiri have been suffering without roads for 45 years

 

போகிபுரம், ஆற்றைக் கடக்கும் கிராமம் என்பதால் அங்கன்வாடி, நியாயவிலைக்கடை, தொடக்கப்பள்ளி, மருத்துவமனை, மளிகை பொருட்கள் என அனைத்திற்கும் இந்த மக்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூளகிரிக்குத்தான் செல்ல வேண்டும். அதற்கான பாதை சின்னாறு அணையைக் கடந்து செல்வதே ஒரே வழியாக உள்ளது.  ஓர் ஆண்டிற்கு 10 மாதங்கள் அணையில் நீர் இருக்கும் என்பதால், 400 மீட்டர் தூரத்தை பரிசலில் கடந்தால் தான் கரையைக் கடக்க முடியும். அதுவும் 15 அடி ஆழ நீரில் ஆபத்தான பரிசல் பயணம் தான் வேறு வழியே கிடையாது. ஆகையால் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

 

அது மட்டும் இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் உடல்நலக் குறைபாடு நேரங்களில் அவசரமாக செல்ல முடியாத சூழலில் பலரிடமும் முறையிட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போகிபுரம் கிராமத்திற்குச் செல்ல மேம்பாலம் அமைக்கத் தொடங்கிய பணிகள் 30% அளவிலேயே நின்றுவிட்டன. அணையில் நீர் அதிகமாக உள்ளதென்பதால் பணிகளைத் தொடர முடியாதென பொதுப்பணித் துறையினர் கைவிட்டதாகச் சொல்லப்படுகிறது . 

 

Villagers in Krishnagiri have been suffering without roads for 45 years

 

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இல்லம் தேடிக் கல்வி வந்த நிலையிலும், இந்த கிராம மக்களின் இல்லங்களுக்குச் செல்ல சாலைகளை எதிர்பார்த்துள்ள நிலைதான் உள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப அனைவரும் அச்சத்தாலேயே அனுப்பாமலும் சிலர் வேறு வழியில்லாமல் பரிசலின் இருபுறமும் கயிற்றால் கட்டப்பட்டு கயிற்றை இழுத்தவாறே கிராம மாணவர்கள் பயணித்து வருகிறார்கள். இந்த பரிசல் கூட அரசு வழங்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.

 

ஆகையால் கைவிடப்பட்ட உயர்மட்ட பாலப் பணிகளை உடனடியாகத் தொடர வேண்டும். இல்லை என்றால் தற்போது தற்காலிகமாக  மாணவர்கள்  நலன் கருதி பள்ளிக்குச் செல்ல மாற்று வழிவகைச் செய்து தரவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, “தற்போதுதான் புதிதாக வந்துள்ளேன். நிச்சயம் உடனடியாக விசாரித்து அந்த பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.